Monday, August 23, 2010


மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் கணினி - இன்டெல் புதிய அறிமுகம்
இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம்.
கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.
ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக
மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.

தில்லுதுரயும் தீவிரவாதியும்
ஒரு ஹிந்திக்காரன், நம்ம தில்லுதுர, ஒரு மலையாளி மூவரும் ஒரு பயங்கரத் தீவிரவாத கும்பலிடம் மாட்டிக்கிட்டாங்க.

தீவிரவாதியின் தலைவனோ, அவனோட கோரிக்கைகள் எதுவும் சரியாகததால இவங்க மூணு பேரையும் கொல்லற முடிவுல இருந்தான்.

இவங்களும் ரொம்பக் கெஞ்சிக்கூத்தாடிப் பாத்துட்டாங்க.

அவன் ஒண்ணும் மசியறதாத் தெரியல.

கடைசியா அவன் சொல்லியும் சொல்லிட்டான்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க மூணூ பேரையும் கொல்லப் போறேன். உங்களோட கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுங்க. முடிஞ்சா நிறைவேத்தி வைக்கிறேன்...!'.

அந்த ஹிந்திக்காரன் சொன்னான்.

"அய்யா... நான் எதுவும் சொல்ல விரும்பலை. கொல்லும்போது கொஞ்சம் வலியில்லாம சட்டுனு கொன்னுடுங்க...!'.

"ஓகே...!' என்ற தீவிரவாதித் தலைவன் தில்லுதுர பக்கம் திரும்பினான்.

"சொல்லு... உன்னோட கடைசி ஆசை என்ன..?".

'கடைசி காலத்தில் நாம் பயந்து செத்ததாக வரலாறு சொல்லிவிடக் கூடாது...' என்று யோசித்த தில்லுதுர,"எனக்கு ஒரு ஐந்து நிமிடம் பேச அனுமதி கொடுங்கள். நான் எங்கள் தமிழரின் வீரம், தமிழரின் ஒற்றுமை, தமிழின் பெருமை பற்றிப் பேச விரும்புகிறேன். அதுவே எனது கடைசி உரையாய் இருக்கணும்னு விரும்பறேன்...!" என்றான்.

"சரி...!' என்ற தீவிரவாதித் தலைவன் அந்த மலையாளியிடம் திரும்பினான்.

"உன்னோட கடைசி ஆசை என்ன..?'.

ஏற்கனவே மிரண்டு போயிருந்த மலையாளி... இன்னும் அதிக மிரட்சியோடு சொன்னான்.

"தயவுசெய்து அவன் பேசறதுக்கு முன்னாடி என்னைக் கொன்னுடுங்க...!'.
.

Facebook Comments

0 comments:

Post a Comment

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsUX2fKlqLd-x8Bh5gJSNrR6zVTXg_7ggHzArj8zxlL92eHimxrXm9P-f6nus0KQ1J1rVV61oNow099_NiPHZ5tJqbzQfjkl4GdB4xvsq-kQAqww6lGr-Zoq4l0GOvGn86O-9ze6xfPggv/s400/bttp-9.png